முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

0
117

முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் 19.04.21 அன்று இரவு இடம்பெற்ற விபத்து ஒன்றில் வீதியில் சென்ற யாசகர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் கண்டி மாவட்டத்தினை சேர்ந்த 38 அகவையுடைய சிவராசா என்பவர் முள்ளியவளை தண்ணீரூற்று முல்லைத்தீவு பகுதிகளில் யாகசம் பெற்ற வந்துள்ளார்.

இவர் பல தடவைகள் மது அருந்திய நிலையில வீதிகளில் விழுந்து காணப்பட்டுள்ளார் இன்னிலையில் நேற்று தண்ணீரூற்று பகுதியில் விபத்து ஒன்றின் போது காயமடைந்த நிலையில் வீதியில் விழுந்து கிடந்துள்ளார், இவரை அவச நோயாளர் காவு வண்டிமூலம் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

விபத்து குறித்து முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது, இவரது உறவினர்கள் விபரம் குறித்து கண்டி மாவட்ட பொலீசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here