நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அதிகரிப்பினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைக்கான அறிவிப்பினை வழங்கும் நடவடிக்கையில் பொலீசார் மற்றும் படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டு வருகின்றது ஒவ்வொரு குடும்பங்களில் இருந்தும் வெளியில் நடமாடுபவர்களின் எண்ணிக்கையினை குறைக்குமாறும் முடிந்தளவு வெளியில் நடமாடி திரிபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் என்றும் திருவிழாக்கள்,கூட்டங்கள்,களியாஙட்டங்கள் போன்றவற்றை பிற்போடுமாறும் பொதுமக்களுக்கான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கும் வண்ணம் கிராமங்கள் தோறும் ஒலிபொருக்கிகளில் மக்களுக்கான அறிவிப்பினை விடுத்துவருகின்றார்கள்.