புதுக்குடியிருப்பில் வீடு உடைத்து பணம்,நகை என்பன கொள்ளை!

0
96

அண்மைக்காலமாக புதுக்குடியிருப்பு நகரை அண்டிய பகுதிகளில் பல்வேளையில் கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அண்மை நாட்களில் வீடுகளில் குடியிருப்பவர்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக பகல் கொள்ளை இடம்பெற்று வருகின்றமை பதிவாகியுள்ளன.

26.04.21 அன்று புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் உள்ள வீட்டில் ஆட்கள் இல்லாத நிலையில் வீடு உடைத்து பணம்,நகை என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

கொள்ளையர்களின் இந்த நடவடிக்கையினால் மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள் இதுவரை 5 கொள்ளைச்சம்பவங்கள்வரை புதுக்குடியிருப்பில் பதிவாகியுள்ள நிலையில் பொலீசாரால் கொள்ளையர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை இது தொடர்பில் துப்பறிந்து விசாரணை நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here