முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
முல்லைத்தீவு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட குமுழமுனைப்பகுதியில் சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கியினை கையாள முற்பட்ட போது அது வெடித்ததில் கையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குமுழமுனை 06 ஆம்வாட்டாரத்தினை சேர்ந்த 32 அகவையுடை நபரே இவ்வாறு வெடிவிபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளது.
இவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி,அதற்குரிய குண்டுகள் என்பன பொலீசாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.