முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்க உட்பட்ட வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த ஒருவருர் கொவிட் 19 ற்கு இலக்காகியுள்ளார்.
ஹட்டன் பொஹவந்தலாவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்ற வள்ளிபுனத்தினை சேர்ந்த 31 அகவையுடை நபருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 29 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 03.05.21 அன்று இதன் முடிவு கிடைக்கப்பட்டு;ள்ளது.
ஹட்டனில் இருந்து வந்த நிலையில் புதுக்குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த நபர் கிளிநொச்சியில் உள்ள கொரோன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவரின் குடும்பத்தினை சேர்ந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.