மாத்தறை வெலிகம பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற 12 மற்றும் 15 வயதுடைய சிறுமிகள் இருவர் காணாமல் போயுள்ளனர்.
இருவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடலில் நீராடச் சென்ற நான்கு சிறுமிகள் நீரில் மூழ்கிய நிலையில், அவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.