9 மாதங்களின் பின்னர் 300 ரூபாவை விட குறைந்த டொலரின் பெறுமதி.. இன்று (19) மத்திய வங்கி வெளியிட்ட நாணயமற்று விகிதம்…
நேற்று திங்கட் கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (மார்ச்-19) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் ரூ. 300.05 முதல் ரூ. 299.29 ஆகவும், விற்பனை விலையும் ரூ. 309.7 முதல் ரூ. 308.90 ஆகவும் பதிவாகியுள்ளது.
வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களின் கூடைக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது.
இலங்கையில் இன்று (19) மத்திய வங்கி வெளியிட்ட நாணயமற்று விகிதம் கீழே இணைக்கப்படுள்ளது.