முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய மத்திய பேருந்து நிலையம் திறந்து வைப்பு!!

0
144

முல்லைத்தீவ மவட்டத்தில் நகரஅபிவிருத்தி நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் நிதி ஒருக்கீட்டில் நகர அபிவிரு;ததி அதிகார சபையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையம் இன்று (08.06.2020) மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது..

கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் எஸ்.கே.திஸாநாயக்க,கிழக்க மாகாண நகர அபிவிருத்தி திட்டமிடல் பணிப்பாளர் கெமுன பிரெமரத்தின,,,கரைதுறைப்பற்று பிரதே செயலாளர் உமைமகள்,முல்லைத்தீவு பிரந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் த.தயாளன்,வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் எஸ்.அமிர்தலிங்கம்,உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளதுடன் முல்லைத்தீவு மத்திய பெருந்து நிலையம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது….

தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராச அவர்ளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது….

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரால் திறந்து வைக்கப்படவுள்ளதாக நினைவுக்கல்லில் அறிவிக்கப்பட்ட போதும் அவர் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை….

முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையம் முதற்கட்ட மாக 25 மில்லியன் ரூபா செலவில் கட்டட வேலைகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக 65 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது….

இதேவேளை குறித்த நிகழ்விற்கு அரச பேருந்துக்கள் வருகைதந்துள்ள நிலையில் தனியார் பேருந்துக்களோ பேருந்து உரிமையாளர்களோ வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது …..

முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரஅபிவிருத்திக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு நகருக்கான பேருந்து நிலையமாக இது அமையவில்லை என பல சமூக நலன் விரும்பிகள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here