முள்ளியவளை முதன்மை வீதியில் தண்ணீரூற்று பகுதியில் குமுழமுனை செல்லும் வீதி சந்தியில் இன்று(09) காலை இடம்பெற்ற விபத்தின் போது இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் வாகனங்கள் சேதமடைந்துள்ளன….
முச்சக்கர வண்டி ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது இதில் முச்சக்கர வண்டியும் உந்துருளியம் சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்…
விபத்து குறித்து முள்ளியவளை வீதி போக்குவரத்து பொலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்….