குறி தப்பிய கொலை – மெகசின் கழன்று விழுந்ததும் தலைதெறிக்க ஓடிய கும்பல்..!

0
221

மஹாபாகே மத்துமகல பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்வதற்கான முயற்சி தோல்வியடைந்துள்ளது. குற்றச்செயலுக்கு வந்தவர்கள் கொண்டு வந்த துப்பாக்கி செயலிழந்தமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) காலை 7.45 மணியளவில் மஹாபாகே மத்துமகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

அதில் ஒருவர் குறித்த வீட்டில் இருந்த நபர் ஒருவரை T56 ரக துப்பாக்கியால் சுட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனால் அந்த நேரத்தில் துப்பாக்கியின் மெகசின் பகுதி துப்பாக்கியில் இருந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது குடியிருப்பாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த வந்தவருடன் சண்டையிட்ட நிலையில், அவர் தனது தலைக்கவசத்தையும் துப்பாக்கியின் மெகசின் பகுதியையும் கைவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சண்டையில் சிறு காயங்களுக்கு உள்ளான குடியிருப்பாளர் சிகிச்சைக்காக ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் துப்பாக்கிச்சூடு நடத்த வந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாபாகே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here