வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் இன்று (28) தெரிவித்தனர்.
வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா – ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஜெகநாதன் கவிப்பிரியா என்பவராவார்.
யுவதி உயிரிழந்ததற்கான காரணம் வெளியாகவில்லை, சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் வவுனியா மாதர்பணிக்கர் மகிழங்குளம் பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் மேலுமொரு மாணவி காதல் பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்றும் பதிவாகியிருந்தது.