முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி வினோதன் பொறுப்பேற்றுள்ளார்…..
இவர் தற்போது நிர்வகித்துவரும் மன்னார் மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியுடன் மேலதிகமாக முல்லைத்தீவு மாவட்டத்தையும் பொறுப்பு ஏற்கும்படி கடந்த 15”ம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவினால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது….
வைத்தியகலாநிதி விநோதன் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை ஏற்றதை தொடர்ந்து,,, தற்போது வரை தற்காலிகமாக பதவியில் இருந்து வந்த வைத்திய கலாநிதி சுகந்தனை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் அத்தியட்சகர் பதவியை பொறுப்பேற்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பணிப்புரை வழங்கியுள்ளார்…..
இவருக்கான வரவேற்பு நிகழ்வு மாவட்ட பிராந்திய சுகாதரசேவைகள் பணிமனையில் நடைபெற்றுள்ளது.
முல்லை அபிவிருத்தி ஒன்றியம் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு வரவேற்பளித்துள்ளார்கள்…..
வைத்திய கலாநிதி வினோதன் மருத்துவ நிர்வாகத்துறையில் உள்ள ஒரு மருத்துவ நிபுணர் என்பதும் கடந்த வருட இறுதியில் அவர் தனது பட்டப்படிப்பை இங்கிலாந்தில் பூர்த்தி செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது……