முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிரப்பு பொலீஸ் பிரிவில் நீண்டகாலமாக மக்களின் பொருட்களை கொள்ளையடித்து வந்த கும்பல் ஒன்று புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்….
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மக்களின் தண்ணீர் மோட்டார்கள்,தொலைக்காட்சி பெட்டிகள்,பான்,முச்சக்கரவண்டி ரயர்,உதிரிப்பாகங்கள்,ஜிம்செற்கள்.ஜன்னர்கள்,கதவுகள்,ஜன்னல் கிறில்கம்பிகள், உள்ளிட்ட மக்களின் பல்வேறு பொருட்கள் கடந்த காலங்களாக வீடுகளில் திருடப்பட்டு வந்துள்ளன குறிப்பாக வீட்டில் நின்ற உழவு இயந்திரத்தினை யக்போட்டு உயர்த்தி விட்டு நான்கு சில்கழும் கழட்டி சென்ற சம்பவம் உள்ளிட்ட பால்வேறு சுவாரசியமான கொள்ளைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன……
இவர்களை கடந்த 01.06.2020 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது Aவர்களை எதிர்வரும் 15.06.2020 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டள்ளது…..