முல்லைத்தீவு- சுதந்திரபுரம் படுகொலை நினைவு நிகழ்வு; பொலீசார் தடை!!

0
130

”’சுதந்திரபுரம் பகுதியில் 1998 ஆம் ஆண்டு சிறீலங்கா விமானப்படையினர் மற்றம் தரைப்படையினரின் கூட்டு தாக்கதல் நடவடிக்கையில் உயிரிழந்த மக்களின் 22ஆவது ஆண்டின் நினைவுநாள் நிகழ்வு வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் சுதந்திரபுரம் சந்தி நிரோஜன் விளையாட்டு கழக மைதானத்தில் நினைவிற்கொள்ள உள்ள நிலையில் காலை பொலீசாரால் தடைசெய்யப்பட்டுள்ளது”…

நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் குறித்த இடத்திற்கு சென்றபோது அங்கு படையினர் பொலீசார் சூழ்ந்து கொண்டுள்ளார்கள் ஏற்பாட்டாளர்களை அங்கிருந்த வெளியேறுமாறு பொலீசாரால் கட்டாயமாக அறிவிக்கப்பட்டு நிகழ்வு செய்யவிடாமல் தடைசெய்துள்ளார்கள்….

சுதந்திரபுரம் சந்திபகுதியில் பொலீசார் நிறுத்தப்பட்டு வீதியால் செல்பவர்களின் உந்துருளிகள் வாகனங்கள் சோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here