வெறியில் புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் வந்து தாக்குதல்.! Video

0
210

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் கார் ஒன்றில் சென்ற நால்வர் அங்கு நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 25.03.2024 இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையில் காரில் சென்ற நான்கு நபர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் சென்ற நபர்கள் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதனை பிடிக்க சென்ற பொது நபர் ஒருவர் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கூட்டுறவு சங்கத்தின் வளாகத்திற்குள் மது போதையில் சென்றவர்களால் கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மேற்கொண்டு இவ்வாறான குழுக்களின் செயற்பாட்டினை பொலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here