100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த சந்திரகிரகணம் – இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.!

0
176

வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படும் கேது ஒரு ராசியில் சுமார் 1 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். நவகிரகங்களில் கேது ஒரு பாவ கிரகமாக கருதப்படுகிறது. இந்த கேது எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிப்பார்.

இப்படிப்பட்ட கேது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைந்தார். இந்த கன்னி ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார். இதனால் 2024 ஆம் ஆண்டில் கேது கன்னி ராசியில் பயணிக்கும் காலகட்டத்தில் பல கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணிப்பார். அப்படி ஒன்றிணையும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகக்கூடும்.

மறுபுறம் சந்திரன் மிகவும் வேகமாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். இந்த சந்திரன் மார்ச் 24 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழைந்தார். இந்த கன்னி ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருந்து பின் துலாம் ராசிக்குள் நுழைவார். ஏற்கனவே கன்னி ராசியில் கேது சந்திரன் இணைவதால், அசுப யோகமான கிரகண தோஷம் உருவாகிவுள்ளது.

இந்த யோகமானது மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. இந்த அசுப யோகத்தால் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும் மற்றும் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக இந்த கிரகண தோஷம் ஹோலி பண்டிகையும், சந்திர கிரகணமும் நிகழும் காலத்தில் நிகழ்ந்துள்ளது. இப்போது கிரகண தோஷத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மிதுனம்;
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டில் கிரகண தோஷம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். வசதிகளும் குறையும். ஒவ்வொரு வேலையிலும் தடையை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். சட்ட விஷயங்களில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தேவையில்லாத முதலீடுகளை தவிர்க்க வேண்டும். நிதி இழப்புக்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி;
கன்னி ராசியின் முதல் வீட்டில் கிரகண தோஷம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய விஷயத்தில் அதிகம் அவதிப்படலாம். வீட்டில் பணப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமான வேலைகளில் தடையை சந்திக்க நேரிடும். பொருள் வசதிகளும் குறையலாம். ஒருசில காரணங்களால் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அடுத்த இரண்டு நாட்கள் தேவையில்லாத சிக்கல்களில் சிக்கி அவதிப்படுவீர்கள்.

மகரம்;
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் கிரகண தோஷம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம். தேவையில்லாத செலவுகளால் அதிகம் அவதிப்படுவீர்கள். மேலும் குடும்பத்தில் சில பிரச்சனைகள் தலைத்தூக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வெற்றிகளை அடைய சிரமப்பட வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கை சற்று மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here